ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை.!
ops 11 mlas case dmk petition
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். பிறகு சசிகலா முதலமைச்சராக தன்னுடைய பதவியை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார்.
பதவியை ராஜினாமா செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவருடன் அப்போது பத்து எம்எல்ஏக்கள் இருந்தனர். சசிகலா முதல்வராக முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதலமைச்சராக ஆக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அதிமுக கொறடா உத்தரவையும் மீறி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களித்தனர்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இதுபற்றி சபாநாயகர் முடிவெடுக்கலாம் என கூறி உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சபாநாயகர் தனபால் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான நீதிமன்ற உத்தரவின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக கொறடா சக்கரபாணி, சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்துள்ளார். ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
English Summary
ops 11 mlas case dmk petition