நான் ஒரு தனி ஆள்.! பாராளுமன்றத்தில் கைதட்டுகளை கவனித்தீர்கள் அல்லவா?.! ஓபிஆர் பதவியேற்பின் பின்னணி.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அனைவரும் பாராளுமன்றத்திக்கு சென்று தங்களின் பதவியை உறுதிமொழியுடன் ஏற்றனர். 

இந்த சமயத்தில்., தமிழகத்தில் வெற்றி பெற்ற திமுக மற்றும் திமுக கூட்டணி எம்பிக்கள் பதவியேறிப்பின் போது பெரியார் மற்றும் தளபதி வாழ்க மற்றும் தமிழ் வாழ்க என்ற உறுதிமொழியுடன் பதவியேற்றனர். 

அனைத்து எம்பிக்கள் பதவியேற்பின் போதும் பிற எம்பிக்கள் பாரத் மாத கி ஜெ என்றும்., ஜெய் ஸ்ரீராம் என்றும் முழக்கமிட்டனர். இந்த நிலையில்., திமுக எம்பிக்கள் பதிவிற்கும் சமயத்தில் மட்டுமே பிற எம்பிக்கள் அவ்வாறு கூறியதாக பெரும்பான்மை ஊடகங்கள் முன்மொழிந்து கூறியது. 

இந்த நிலையில்., அதிமுக கட்சியின் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ஓ.பி.இரவீந்திரநாத் குமார் பதவியேற்ற சமயத்தில் வாழ்க எம்.ஜி.ஆர்., வாழ்க ஜெயலலிதா., வந்தே மாதரம்., ஜெய்ஹிந்த் என்று கூறி பதவியேற்றார். 

இதனை கேட்ட திமுகவை தவிர்த்த பிற எம்பிக்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதன் மூலமாக தமிழகத்தில் அதிமுக ஒரு தொகுதியில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றாலும்., அவருக்கு உறுதுணையாக பாராளுமன்றத்தில் பல எம்பிக்கள் உள்ளார்கள் என்பதை உணர்த்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

opr parliament vandhe madaram and jaihind problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->