தமிழக அவசர சட்டம்.! ரூ. 5-10 ஆயிரம் அபராதமும், 6 மாதம்- 2 வருட சிறை.! செல்போன்-கணினி பறிமுதல்.!
online rummuy games
ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்கள் - இளைஞர்களிடையே மன உளைச்சல் அதிகமாகி தற்கொலை, தனிமை போன்ற பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆன்லைனில் ரம்மி விளையாட்டு விளையாடும் இளைஞர்கள் தங்களது பணத்தையும் இழந்து உயிரையும் விடும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை தவறான வழிக்கு நடத்துகின்றன. அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையாக, இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட ரம்மிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. 1930 தமிழ்நாடு சூதாட்ட சட்டம், 1888 சென்னை மாநகர காவல் சட்டம், 1859 தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டு, 2020 தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் அவசர சட்டம் கடந்த 2020 நவம்பர் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 21-ம் தேதி தமிழக அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சற்றுமுன் ஆன்லைன் சூதாட்ட ரம்மி விளையாட தடை செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம், ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாதசிறைத் தண்டனையும் வழங்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், லேப்டாப்-கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.