ஸ்டாலினை பங்கமாக வச்சி செய்த நித்தியானந்தா.! அவரையும் விட்டு வைக்கலையா.?!
NITHIYANANDHA VIDEO ABOUT STALIN
நேற்று நித்யானந்தா வெளியிட்ட வீடியோ ஒன்றில், 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.
இந்திய காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார். தான் கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அதற்கு குடியுரிமை பெற விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் நித்யானந்தா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அந்த நாட்டில் குடியுரிமை பெற 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கைலாஷ் நாடு இருப்பதாக கூறப்படும் ஈக்குவடார் நாட்டின் அரசு நித்தியானந்தாவிற்கு நாங்கள் தீவை வழங்கவில்லை அவருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டோம் என்று கூறி இருக்கின்றது.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றால் நித்யானந்தா போல தீவு ஒன்றை உருவாக்கி அதற்கு தன்னை தானே முதல்வராக அறிவித்துக் கொள்ளலாம் என்று கிண்டல் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று வெளியிட்ட வீடியோவில் நித்யானந்தா, "வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற ஸ்டாலின் முதல்வராவார், அவருக்கு மீனாட்சி அருள் இருப்பதால் அவர் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது." என்று தெரிவித்தார்.
மேலும், அவர் முதல்வர் ஆன உடன் கைலாஷ் நாட்டில் இருக்கும் ஒரு தீவை அவருக்கு பரிசளிக்க திட்டமிட்டு இருக்கின்றேன். அங்கே அவர் தான் முதல்வர் என்பது போல அவர் வீடியோவில் தெரிவித்து இருக்கின்றார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
English Summary
NITHIYANANDHA VIDEO ABOUT STALIN