இப்படி எல்லாம் நாங்க செய்யவேயில்லை., இவற்றை வளர்க்க தான் நாங்கள் போராடுகிறோம் நிர்மலா சீதாராமன் தகவல்!! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒன்றில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை தமிழ் வளர்க்கும் முயற்சியில் தான் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டை துளியளவும் உண்மை இல்லை என்றார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்து பேசிய அவர், ஆங்கிலேயரின் கலாசாரத்தை பின்பற்ற கூடியது, நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் நிதி பட்ஜெட்டை சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் தான் சூட்கேஸ் போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றார். தஞ்சாவூர் கோவில் போல தென்கிழக்கு ஆசியாவில் பல கோவில்கள் பிரம்மாண்டமாக இருக்கிறது அதனுடைய சிற்பக்கலைகள் பாராட்டத்தக்கது.

தொழில் முனைவோர்களை உருவாக்கும் தொழில்களை பெருக்கிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கை கண்டிப்பாக மத்திய அரசு எடுக்கும் கல்வி தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர் அடுத்த தலைமுறையின் போது இந்தியர்கள் மற்ற நாட்டினர்க்கு  குருவாக இருப்பார்கள் என தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nirmala seetharaman press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->