உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் ., இந்த தேதி வரை கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
next three days heavy rain
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியமேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வரும் 24 ஆம் தேதி மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு கனமழை பொழிய வாய்ப்புள்ளது
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் மன்னார் வளைகுடாவில் தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். இதனால் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா மற்றும் அந்தமான் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும், எனவே மீனவர்கள் யாரும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை இடைவெளிவிட்டு லேசான மழை பெய்யும். நேற்று நள்ளிரவு சென்னையில் பெருபாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பொய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பொய்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
next three days heavy rain