அடுத்த காங்கிரஸ் தலைவர் இவரா? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் இதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. 

மேலும் அவர் ராஜினாமா முடிவை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காத ராகுல் காந்தி தனது முடிவிலிருந்து மாறப் போவதில்லை என ஏற்கனவே தெரிவித்து வந்த ராகுல்.

இந்தநிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்ட ராகுல் அதில் ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் கொடுத்து விட்டேன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன் எனவும் காங்கிரஸ் செயற்குழு உடனடியாக கூடி புதிய தலைவரை  தேர்வு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார்  

 ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா-வை  நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி அறிவித்துள்ளது.  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக இடைக் கால தேர்வுசெய்யபட்ட மோதிலால் வோரா  மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்துள்ளார் 

இதனையடுத்து, புதிய தலைவரை தேர்தெடுக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை நடத்தி வருகின்றன புதிய தலைவரை தேர்வு செய்யும் பட்டியலில் பல்வேறு முக்கிய தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் இதற்ககான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next congress leader


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->