இன்று தமிழகத்தில் உதயமாகும் புதியகட்சி.! ரஜினிக்கு நெருங்கிய முக்கிய புள்ளி.!  - Seithipunal
Seithipunal


ஓரிரு மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு நிச்சயம் கட்சி துவங்குவேன் என்று ரசிகர்களுக்கு உறுதி கொடுத்தார். அதன் பெயரில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக கட்சி பணிகளை துவங்கி ஈடுபட்டு வந்தனர். கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று ரத்த அழுத்த உயர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து, அவர் அரசியல் குறித்து என்ன முடிவு எடுப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் கவலையில் இருந்த நிலையில் நிரந்தரமாக தனது அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளியை வைப்பதாகவும் தான் அரசியல் கட்சியை துவங்க வில்லை என்றும் திட்டவட்டமாக ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார். மேலும், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகி நடிகர் ரஜினியிடம் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி இன்று தனி கட்சி, கோடி உள்ளிட்டவற்றை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 

"நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சிக்கான பணிகள் உள்ளிட்ட‌ அனைத்தையும் செய்து வந்த அனுபவத்தில் மிக குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க உள்ளேன். இன்று சென்னையில் எங்கள் கட்சியின் பெயர், கொடி, கொள்கை, உறுதிமொழி ஆகிய‌வற்றை அறிவிக்கிறேன். 

வரும் மார்ச் 1-ம் தேதி கட்சியின் சின்னம் உள்ளிட்டவற்றை வெளியிட இருக்கிறேன். ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 6 மாவட்ட செயலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்களும் எங்களோடு கைகோத்துள்ளனர். எந்த பெரிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை. 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட உள்ளோம்" என்று அர்ஜுனமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new party in tn


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->