சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்.! முக ஸ்டாலின் அதிரடி.!
new chennai corporation commissioner
சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட ஐஐஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று சென்னை மாநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப்சிங் பேடி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ் தற்போது மாற்றப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலாளராக இருந்த கவுண்டிப் சிங் பேடி தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ககன்தீப் சிங் பேடி ஏற்கனவே மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி உள்ள அனுபவம் பெற்றவர். இவர் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து மக்களின் மனதை வென்றவர் ஆவார்.
English Summary
new chennai corporation commissioner