100 ரூபாய் இருந்த மட்டும் தான் போட்டோ எடுக்க முடியும்., மதிமுக தலைமை அறிவிப்பு!!
new announce in mdmk party
மதிமுக பொது செயலாளர் வைகோவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என மதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுதுகுறித்து மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, கட்சி தொண்டர்கள் யாரும் இனி சால்வை அணிவிக்க கூடாது எனவும், சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாத நிர்வாகிகள் அனைவரும் வாழ்நாள் உறுப்பினராக இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
new announce in mdmk party