முறிகிறதா திமுக - காங்கிரஸ் கூட்டணி? திமுக முன்னணி தலைவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!
nehru speak about dmk congress alliance
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது இதில் திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 10 மக்களவை தொகுதிகளிலும் வெற்றிபெற்றது
இந்தநிலையில், தண்ணீர் பிரச்சினையை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.என் நேரு தலைமையில் திருச்சி மாவட்ட திமுக போராட்டம் நடத்தியது. இதில் பேசிய கே.என் நேரு வருகிற உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் எனவும் காங்கிரசு கட்சிக்கு எத்தனை நாள் தான் திமுக பல்லாக்கு தூக்குவது? என பேசினார்
மேலும், வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திருச்சியிலாவது திமுக தனித்து போட்டியிட, ஸ்டாலினை வலியுறுத்துவேன் என கே.என் நேரு பேசினார். திமுகவின் முக்கிய தலைவர் இப்படி பேசியிருப்பது காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது
English Summary
nehru speak about dmk congress alliance