அரியலூரில் கனிமொழி என்ற மாணவி நீட் தேர்வால் தற்கொலை.!
NEET Suicide Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், துளாரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கனிமொழி. மாணவி கனிமொழி 12ஆம் வகுப்பில் 600க்கு 562 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த மாணவி கனிமொழி நீட் தேர்வு எழுத முடிவு செய்து இருந்தார்.
அதன்படி இவர் கடந்த 12 ஆம் தேதி நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு எழுதிய பின்னர், மிகுந்த சோகத்தில் மூழ்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாணவி கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோர்கள் தனது மகள் நீட் தேர்வு எழுதிய தினம் முதல் மாணவி மன உளைச்சலுடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.