ராணுவத்தையே கொண்டு வந்தாலும் இதை செய்ய விடமாட்டோம்., புதுச்சேரி முதல்வர் அதிரடி!! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரி அரசின் அனுமதியில்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

புதுச்சேரியில் அரசு மற்றும் மக்களின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர முடியாது என தெரிவித்த அவர் மத்திய அரசு ராணுவத்தை கொண்டு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

narayanasamy press meet about hydrocarbon


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->