ரஜினி ரசிகர்கள் எல்லாம் காலாவதி ஆனவர்கள்.! காலாவதி ஆன அரசியல்வாதி கருத்து.! - Seithipunal
Seithipunal


அரசியல் பிரமுகரான நாஞ்சில் சம்பத் ரஜினி ரசிகர்கள் அனைவரும் என் வயதை தாண்டியவர்கள், அவர்களால் என்ன செய்யமுடியும் என்று நக்கல் செய்து இருக்கின்றார். 

கட்சி தொடங்குவது உறுதி என்பது குறித்து ரஜினிகாந்த் உறுதியளித்ததன் பின்னர் தன்னுடைய படம் குறித்த வேலைகளை அவர் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். 

2021 சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கின்ற நிலையில், இந்த சந்திப்பானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கமல் மற்றும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து அரசியல் பிரமுகரான நாஞ்சில் சம்பத் பதிலளித்து இருக்கின்றார். 

அவர் கமலின் அரசியல் வருகை என்பது நமக்கு முன்னதாகவே தெரிந்து விட்டது. மய்யம் இப்போது மையத்தில் தான் இருக்கின்றது. அது போல தான் ரஜினியின் வருகையும் தமிழ்நாட்டில் எந்த விதமான ரசாயன மாற்றத்தையும் புதிதாக ஏற்படுத்திவிட முடியாது.

ரஜினி ரசிகர்கள் அனைவரும் என் வயதை தாண்டியவர்கள் தான், இனிமேல் அவர்களால் என்ன செய்ய முடியும்.? ஒன்றுமே செய்ய முடியாது." என்று நக்கலடித்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nanjil sampath speech about rajini politics


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->