மறைந்த ராஜீவ் காந்தியைப் பிரதமராக்குவோம்! திமுக கூட்டணியின் பிரச்சாரம்! அதிர்ச்சியில் மக்கள்! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவை தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை தனித் தொகுதியில் போட்டியிடுகிறது. இத்தனி தொகுதி வேட்பாளராக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராஜ் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இன்று வேட்பாளர் செல்வராஜ் மக்களிடையே பிரச்சாரம்  செய்த போது பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சியை வெற்றி பெற செய்யுங்கள், ராஜீவ்காந்தியை பிரதமராக்குவோம். அதற்கு மக்களாகிய உங்களின் ஆதரவு தேவை என பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனை பிரச்சாரக் கூட்டத்தில் கேட்ட பொதுமக்கள் ராஜீவ் காந்தியா அவர் இறந்து  28 வருடங்கள் ஆகிறதே இன்னும் செல்வராஜ்க்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரியவில்லையே என்று அதிருப்தியில் கூட்டத்தில் கூச்சலிட்டனர்.

கூட்டத்தில் இருந்தவர்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாத போது இவர் நாளை நம் தமிழக மக்களின்  நலத்திட்டங்களை மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பார். அப்படி வைத்தாலும் ராஜீவ்காந்தியிடம் சென்றா கோரிக்கை வைப்பர்? என கேளிக்கையாக பேசத் தொடங்கினார்கள்.

அத்துடன் பிரச்சாரத்தை பார்வையிட்ட ஒரு சில மக்களும் திமுக தலைவரை போலவே இவரும் உளறுகிறாரே என  கவலையுடன் கலைந்து சென்று விட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nagapattinam CPI candidate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->