இதெற்கெல்லாம் முஸ்லிம் பயங்கரவாதிகள் தான் காரணம்.! பிரபல கட்சியின் மாவட்ட செயலாளர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் மாவோயிஸ்ட்களை முஸ்லிம் பயங்கரவாதிகள் தான் ஊக்குவித்து வருவதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாவட்ட செயலாளர் பி.மோகனன் தெரிவித்துள்ளார். 

கேரள கம்யூனிஸ்ட் கூட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது இந்த கூட்டத்தில் அக்கட்சியின் கோழிக்கோடு மாவட்ட செயலாளர் பி.மோகனன், பேசியதாவது, கேரளாவில் உள்ள மாவோயிஸ்ட்களை முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் தான் ஊக்குவித்து வளர்த்து வருவதாக தெரிவித்தார். கேரளாவில் மாவோயிஸ்ட்களின் முழு பலதத்துடன் இருப்பதற்கு காரணம் முஸ்லிம் பயங்கரவாதம் தான். ஏனென்றால் மாவோயிஸ்ட்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவது அவர்கள் தான்.

குறிப்பாக என்டிஎஃப் எனப்படும் தேசிய முன்னேற்ற அமைப்புடன் சேர்ந்து முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் தான் மாவோயிஸ்ட்களின் முழுப் பலம். இதனால் இவர்களுக்கு இடையிலான நட்பு வலுப்பட்டுள்ளது. கேரள காவல்துறையினர் இதுதொடர்பாக உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபா் 28-ஆம் தேதி கேரளத்தில் நான்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில். 2016-ஆம் ஆண்டு முதல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகு கேரளத்தில் இதுவரை ஏழு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

muslims help to


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->