ஜோதிமணிக்கு அடித்த அதிர்ஷடம்! வெளியான அதிரடி அறிவிப்பு!
mp jothimani new post in congress
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே சி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, மல்லிகார்ஜுனா, மோதிலால் வோரா உள்ளிட்டோர் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ராகுல் காந்தி, பிரியங்கா, மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், சிதம்பரம் உள்ளிட்டோரும் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தொடர்வார்கள்.
தமிழகம், புதுச்சேரி, கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக் மத்திய பிரதேச மாநில காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக எம்பி ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்." என்று அந்த அறிவிப்பில் கே சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
English Summary
mp jothimani new post in congress