போட்டியின்றி தேர்வாகப்போகும் பாஜக தேசிய தலைவர்.. பிரதமர் மோடி வாழ்த்து.!!
modi wish for jp nadda
பாஜகவின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்புள்ளது.
ஜே.பி. நட்டாவுக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக விதிகளின்படி கட்சியின் புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்களில் புதிய மாநில பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதன்படி நாட்டின் மொத்தம் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 21 மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாஜகவின் தேசியத் தலைவராக ஜேபி நட்டா போட்டியின்றி என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.