பாராளுமன்றத்தில் மோடி செய்த காரியம்.! எழுந்த சிரிப்பலை.!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தியை கிண்டல் செய்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற தீர்மான கூட்டத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 'இன்னும் ஆறு மாதங்களில் என்னை யாரோ கட்டையால் அடிக்க போவதாக தெரிவித்து இருக்கிறார். கொஞ்சம் இது கடினமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். 

முன்னதாக, ஆறு மாத காலங்களாக சூரிய நமஸ்காரம் செய்து என்னுடைய முதுகை அடிவாங்க தயார்படுத்திக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்தார். அப்போது இடைமறித்த ராகுல்காந்தி நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஒரு கேள்வியை எழுப்பி இருக்கின்றார்.

இதற்கு கிண்டல் செய்யும் விதமாக பதில் அளித்த மோடி, "இங்கே நான் நாற்பது நிமிடங்கள் ஆக பேசிக்கொண்டே இருக்கின்றேன். ஆனால், இந்த டியூப்லைட்க்கு இப்பொழுதுதான் மின்சாரம் பாய்ந்து இருக்கிறது போலும். பல்வேறு ட்யூப் லைட்டுகளும் இப்படித்தான் இருக்கின்றன." என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டவுடன் பாஜக எம்பிக்கள் பலரும் பலமாக சிரித்து இருக்கின்றனர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் கடுப்பாகியதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi speech about ragulgandhi in Parliament


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->