இனி இதற்க்காக முன்னுரிமை., கார்கில் வெற்றி விழாவில் மோடி உரை!! - Seithipunal
Seithipunal


இந்தியா பாகிஸ்தானிடையே நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. கார்கில் போரின் 20 ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போது போர் விண்ணிற்கு எட்டியுள்ளது எனவும், அதே நேரத்தில் இணையதளத்திலும் போராட வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக நாம் முப்படைகளையும் இந்த காலத்திற்கு ஏற்றவாறு நவீனமாக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்தார். ராணுவத்தை நவீனமாக்க அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

கடந்த 5 ஆண்டுகளில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து வகையான முடிவுகளையும் தமது அரசு எடுத்துள்ளதாகவும் அத்திட்டங்களையெல்லாம் பட்டியலிட்டு பேசினார். கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, முன்பு போரில் தோற்ற பாகிஸ்தான், தற்போது மறைமுகமாக தீவிரவாதத்துக்கு உதவி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். 

இந்த உலகத்திலுள்ள மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக தீவிரவாதம் இருவதாகவும் தெரிவித்த அவர். கார்கில் போரில் நாம் பெற்ற வெற்றி நமது நாட்டின் வலிமை, பொறுமை, ஒழுக்கம், புனிதத்தன்மை மற்றும் ஒவ்வொரு இந்தியனின் எதிர்ப்பார்ப்புக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi speech about kargil war


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->