கருணாநிதி செய்துவிட்டுப்போன காரியத்தால் எனக்கு பல சங்கடம்.! கடுப்பை வெளிப்படுத்திய ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா நகரில் இருக்கும் விஜய் ஸ்ரீ மகாலில் திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தில்லை கதிரவனின் திருமண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின், "தமிழுக்கு பல்வேறு சோதனைகள் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இனிமேலாவது திமுகவினர் குடும்ப வாரிசுகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். இதற்கு உங்கள் பெயர் தமிழ் இல்லையே என நீங்கள் கேட்கலாம். கலைஞருக்கு கம்யூனிச கொள்கையின் மீது இருந்த ஈர்ப்பால் எனக்கு இந்த பெயர் வைத்தார்.

எனது மூத்த அண்ணன் முக.முத்துவிற்கு தந்தை முத்துவேலர் நினைவாக கலைஞர் பெயர் சூட்டினார். இரண்டாவது அண்ணனுக்கு அழகிரி என பெயர் சூட்டி உள்ளார். தம்பி, தங்கைகளுக்கும் அப்படியே தமிழ் பெயர்களை சூட்டியுள்ளார்.

நான் ஸ்டாலின் என்ற பெயரின் காரணமாக பல சங்கடங்களை அனுபவித்து இருக்கின்றேன். சென்னையில் பள்ளியில் சேர்க்கும் பொழுது ஸ்டாலின் என்ற பெயரை மாற்றக் கூறினார்கள். ஆனால், பள்ளியை மாற்றலாமே தவிர பெயரை மாற்ற மாட்டேன் என்று கூறிவிட்டார். அதுபோலவே ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் பல சங்கடங்களை அனுபவித்தேன்." என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

m.k.stalin disagree with karunanithi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->