ஒரே ஒரு வார்த்தை., ஃபுல் டேமேஜ்.! முக ஸ்டாலினை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!
MK Stalin tweet jan 21
திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று ட்வீட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார். அதில், "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் நால்வரைப் படகோடு மூழ்கடித்துக் கொன்றிருக்கிறது இலங்கைக் கடற்படை.
மத்திய பா.ஜ.க. அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது? இலங்கைப் பயணத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர், மீனவர் பிரச்சினை பற்றிப் பேசினாரா? அவர் இலங்கை சென்று திரும்பியதும் இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளதே?
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இதனைக் கண்டிப்பதோடு, உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 கோடி இழப்பீடு தரவும் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.
ஸ்டாலினின் இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட்ட பெரும்பாலானோர், "இந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததே நீங்கள் தான். இன்று தேர்தலுக்காக கண்ணீர் வடிக்கிறீர்களா?., உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது மீனவர்கள் பற்றி பேச" என்று தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் இட்ட பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் சில.,