ஆட்டம் முடியும்., ஆறு மாதத்தில் விடியும் - மு.க.ஸ்டாலின் ட்வீட் .!! - Seithipunal
Seithipunal


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போதிய இடவசதி இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. 

கலைவாணர் அச்சுறுத்தலால் மூன்று நாட்களும் மட்டும் சட்டப்பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சட்டப் பேரவைக் கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் நீட் தேர்வுக்கு எதிராக வாசங்கள் அடங்கிய முக கவசம் அணிந்து கொண்டு சட்டப் பேரவை கோட்டத்தில் கலந்துகொண்டனர். 

அதையடுத்து, சட்டப் பேரவையில் நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த நிலையில், நீட் குறித்த விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றது. நீட் தேர்வினால் 13  மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகதான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

இந்நிலையில், முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து முக ஸ்டாலின் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்தவை, மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் விவாதிக்காமல் நீட்டை  தமிழகத்துக்குள் நுழைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அட்டைக் கத்தி சுழற்றுகிறார். ஆட்டம் முடிகிறது., ஆறு மாதத்தில் விடியும்! என பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin tweet for edappadi palanisamy


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->