குருங்குடி வெடிவிபத்து! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்!
mk stalin talk about kurunkudi fire accident
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்து இயங்கிவந்த நாட்டு வெடி தயார் செய்யும் தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டதில், உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
"கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குருங்குடி கிராமத்தின் அருகே உள்ள இடைநாறூர் என்ற பகுதியில் பட்டாசு தயாரிப்பதைக் குடிசைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர். இங்கு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சம்பவ இடத்திலேயே 5 பேர் மரணம் அடைந்தார்கள் என்றும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 2 பேர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் சொல்கின்றன. உயிரிழந்த 7 பேரும் பெண்கள். அதில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
கொரோனா காரணமாக நான்கு மாதங்கள் வருமானம் இல்லாமல் இருந்த தொழிலாளர்கள், தொழிலை மீண்டும் தொடங்கிய அன்றே இத்தகைய விபத்தில் சிக்கியது வேதனை தருவதாக உள்ளது. முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட பட்டாசு உற்பத்தியாக இருந்தாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
mk stalin talk about kurunkudi fire accident