தோல்வி பயத்தில் பின்வாங்கிய ஸ்டாலின்.! உற்சாகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.!!
mk stalin says tn assembly
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள் பற்றிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள் இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.
மேலும் மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் கேள்வி, பதில் உண்டு எனவும் தெரிவித்த சபாநாயகர்.
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
வருகின்ற சட்டப்பேரவை கூட்ட தொடர்பான அட்டவணையை தொடர்பாக சபாநாயகர் தனபால் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றம்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம், அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம், தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவு திமுக எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
mk stalin says tn assembly