தமிழகம் முழுவதும் 3700 இடங்கள்! இன்று நடந்தது என்ன?! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று திமுக தலைமையில் வேளாண் மசோதாக்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமை நகரிலும் திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு விரோதமாக இயற்றப்பட்ட சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் தலைமையில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் கீழம்பி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பச்சைத் துண்டு, பச்சை நிற மாஸ்க்  அணிந்தபடி மு க ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு துணையாக உள்ள அதிமுக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

தமிழகம் முழுவதும் சுமார் 3700 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்று மு க ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN PROTEST IN KANJIPURAM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->