மத்திய அமைச்சரின் தாயார் மறைவு! ஸ்டாலின் இரங்கல்!  - Seithipunal
Seithipunal


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழகத்தை சேர்த்தவர். இவரின் தந்தை சுப்ரமணியன் ஆவார். தற்போது வெளியுறவுத்துறைச் அமைச்சராக உள்ள ஜெய்சங்கரின் தாயார் உடல்நலக்குறைவால் காரணமாக நேற்று காலமானார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், "என் தாயார் சுலோச்சனா சுப்ரமண்யம் காலமானதை தெரிவிக்க மிகவும் வருத்தப்படுகிறேன். எனது தாயார் உடல்நலம் குன்றி இருந்தபோது, அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும், எங்கள் குடும்பம் நன்றியுள்ளவர்களாக இருக்கும்" என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "தனது தாயார் சுலோச்சனா சுப்ரமணியம் அவர்களை இழந்து வாடும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய துயர்மிகு நேரத்தில் அவர்கள் வலிமை பெற்றிட விழைகிறேன்”. என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin mourning to minister jeysanker mother dead


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->