கண்ணீர் கடலில் மூழ்கிய திமுகவினர்.. இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட மு.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜானகிராமன். இவர் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக பதவி வகித்த இவர், நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியிலிருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக  தேர்வு செய்யப்பட்டவர். 

மேலும் 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதல்வராகவும் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜானகிராமன் சிகிச்சை பலனின்றி காலமானார். 

அவரது உடல் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவர் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலந்தூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து ஜானகிராமனின் உடல் புதுச்சேரி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin mourning in janakiraman


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->