ஆன்லைன் வகுப்பு, ஜல்லிக்கட்டு.. தமிழகத்தில் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.! சற்றுமுன் தொடங்கியது ஆலோசனை.!
MK STALIN MEETING FOR OMICRON AND CORONA ISSUE
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கையுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வரும் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த, மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவது, பள்ளி -கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
English Summary
MK STALIN MEETING FOR OMICRON AND CORONA ISSUE