அதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கை.. நீதிமன்றத்தை நாடிய ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


நேற்று தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளில் சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த டிசம்பரில் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், உள்ளாட்சித்துறை அமைச்சரை விமர்சித்தது, மேலும் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக முக ஸ்டாலின் மீது வழக்கு தொடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் முதலமைச்சர் சார்பில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணைக்கு, பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4ம் தேதிகளில் ஸ்டாலின் ஆஜராக அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் மு க ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி 24ம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.ஸ்டாலின் மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin case for high court


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->