சற்றுமுன்: முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்.!!
mk stalin announcement about thiruvarur by election cancel
திருவாரூரில் வரும் 28 ம் தேதியன்று இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையமானது அறிவித்திருந்தது. கஜாப்புயல் தாக்கத்தில் இருந்தே இன்னும் அங்குள்ள மக்கள் மீண்டு வராத நிலையில்., இடைத்தேர்தல் அறிவிப்பானது அங்குள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும்., தற்போது இடைத்தேர்தலை வைத்தால் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பணிகள் வழங்கப்படுவது பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது., இதனை அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்., சனிக்கிழமை திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தலாமா? என்று மாவட்ட ஆட்சியர் அங்குள்ள அரசியல் கட்சியினர் கேட்டபோது., அனைவரும் தேர்தலை ஒத்தி வைக்கக்கூறினர்.
இன்று காலையில் இந்திய தேர்தல் ஆணையமானது திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தந்த கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தலுக்கான பணியை தொடங்கலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்., தேர்தலை அதிரடியாக இரத்து செய்து தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பை வெளியிட்டது.
இதனை வரவேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்., தேர்தல் ஆணையமானது திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்தது வரவேற்கத்தக்கது. வரும் நாடாளுமன்றத்தின் தேர்தலோடு 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையமானது நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
English Summary
mk stalin announcement about thiruvarur by election cancel