திமுக ஆட்டம் காலி.! முக அழகிரி போட்ட பக்கா பிளான்., பரபரப்பு பேட்டி.!
mk azhagiri ready for election
வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு, புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலினின் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து மு.க. அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தவது, "திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு, புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நான் எனது ஆதரவாளர்களை சந்திக்கவில்லை. என் ஆதரவாளர்கள் எப்போதும் என்னிடம் தான் உள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மை.
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம். அதனை பற்றி நான் தற்போது சொல்ல முடியாது. ஏனென்றால் நான் ஜோதிடன் கிடையாது. தற்போது திமுகவில் உள்ள ஒரு சில தலைவர்கள் பதவிக்காகவே உள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அந்த நிலைமையை நீங்களே பார்க்கத்தான் போகிறீர்கள்." என்று முக அழகிரி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
English Summary
mk azhagiri ready for election