இன்னும் ஒரு வாரம் தான்., அந்த அறிக்கை கைக்கு வந்துவிடும் - அமைச்சர் செந்தில் பாலாஜி..!
minister senthilbalaji say about admk govt coal issue
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிலக்கரி ஊழல் தொடர்பான முழு அறிக்கையும், இன்னும் ஒரு வாரத்துக்குள் கிடைத்துவிடும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவிக்கையில், தமிழகத்தில் தற்போது சீரான விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்படும் போது பொது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நாம் செயல்படும் வேண்டும்.
இந்த ஆட்சியில் தான் மின் உற்பத்தி திட்டங்கள் மக்களுக்கான திட்டங்களை திட்டங்களாக அமைந்துள்ளது.
கடந்த 10 மாத காலத்தில் மின்சார வாரியத்திற்கு சுமார் 2200 கோடி ரூபாய் சேமிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு செலுத்த கூடிய வட்டி சதவீதமும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதத்தில் 98187 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை இந்த திமுக அரசு வழங்கியுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பான முழு அறிக்கை இன்னும் ஒரு வார காலத்திற்குள் கைக்கு கிடைத்துவிடும் என்று, அந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
English Summary
minister senthilbalaji say about admk govt coal issue