மத்திய அரசு கொள்கையை, தமிழக அரசு ஏற்காது? அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி.!!
minister sengottaiyan press meet in central govt
நேற்று முன்தினம் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. இதை தொடர்ந்து நேற்று அமைச்சரவை கூடியது அதில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த, இந்தி பேசாத மாநிலங்களுக்கும் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மீண்டும் இந்தித் திணிப்பு முயற்சி நடைபெறுவதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியவை, தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்பட போவதில்லை. மேலும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி பரிந்துரையை தமிழக அரசு ஏற்காது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
English Summary
minister sengottaiyan press meet in central govt