ஹாட்ரிக் அடிக்கப் போகும் அதிமுக.. தயார் நிலையில் நிர்வாகிகள்.! அமைச்சர் தகவல்.!!
minister sellure raju says about assembly election
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரு பெரும் தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தற்போது தேர்தலுக்காக மு க ஸ்டாலின் கிராமசபை கூட்டங்கள் நடத்தினார். இது தோல்வி அடைந்ததால் தான், இனி தொகுதிவாரியாக மக்களை ஏமாற்ற தயாராகிவிட்டார்.
திமுகவினரை மக்களை ஒருபோதும் நம்பாதே தயாராக இல்லை. தேர்தலுக்காக வேல் ஏந்தி வேடமிடுகிறவர்கள். கடவுளை ஏமாற்ற முடியாது. வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது. மக்களின் அமோக ஆதரவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதிமுக மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று, ஆட்சியை அமைப்பது உறுதி. ஆட்சி மாற்றத்திற்காக தேர்தல் அல்ல, ஆட்சி தொடர்வதற்கான தேர்தல் என்ற மனநிலையில் தான் மக்கள் உள்ளனர் என கூறினார்.
English Summary
minister sellure raju says about assembly election