ஒரு பெண் அதிகாரியால், முட்டி மோதிக்கொள்ளும் அமைச்சர்கள்!!
minister sellur raju and minister veeramani fight
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர் வேலைக்கு ஆறுமாதத்திற்கு முன்பே நேர்காணல் நடைபெற்றது. அந்த நேர்கானலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த வாரம் பணி நியமன ஆணையம் வழங்கப்பட்டது.
மாவட்டப் பிரிவினை விவகாரத்தில் ஏற்கனவே மோதல்கள் நடந்து வரும் நிலையில், இது வேலூர் மாவட்ட அதிமுகவினருக்கு மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி சொன்ன ஆட்களுக்குத்தான் பதவி என்கிற செய்தி தான். இது கூட்டுறவு சங்கத் தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெண் அதிகாரி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராம். அதனால் நான் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் வீரமணிக்கும் செக் வைத்தாக கூறப்படுகிறது.
அதன்பிறகு அமைச்சர் வீரமணியிடம் பேசி மொத்த பணியிடங்களை,அமைச்சர் வீரமணி சொல்லும் ஆட்களுக்கு பாதி,பெண் கூட்டுறவு சங்கத் தலைவி சொல்லும் ஆட்களுக்கு பாதி என பிரித்துக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்களாம். இப்போது அமைச்சர் வீரமணிக்கும், அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் இடையே மோதல் நிலவி வருவதை அதிமுகவினர் கூறுகின்றனர்.
English Summary
minister sellur raju and minister veeramani fight