இரட்டை வேடம் போடும் திமுக..! ஸ்டாலினை பந்தாடும் அமைச்சர்..!
minister says about dmk party
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 2009ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் தான் எழுதி இருக்கிறது.
இதை தொடர்ந்து, மத்திய அரசில் பங்கு வகித்த அன்று இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காமல், தற்போது அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். குடியுரிமை விவகாரத்தில் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது.
இலங்கை தமிழர்களை ஏமாற்ற திமுக போடும் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் நீதிமன்ற நேரத்தை ஸ்டாலின் வீணடிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
வணிகர்கள் மற்றும் சிறு தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம். மேலும் மத்திய அரசு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1,338 கோடி மற்றும் ஐஜிஎஸ்டி ரூ.4,500 கோடியை வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.
English Summary
minister says about dmk party