8 மாதமா?.. எத்தனை வருஷம் ஆனாலும்.... திமுகவை ஒரே வார்த்தையில் கலாய்த்து தள்ளிய அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டமானது நேற்று சென்னையில் நடைபெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக முக்கிய நிர்வாகிகள் மட்டும் வரவழைக்கப்பட்டு இருந்த நிலையில், மீதமுள்ளவர்கள் இணையத்தளம் வாயிலாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் 8 மாதத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும் என்று பேசியிருந்தார். இந்த விசயத்திற்கு பதில் கூறும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

இந்த பேட்டியில், " திமுகவால் எப்போதும் ஆட்சிக்கு வர இயலாது. ஏன்? 8 மாதங்கள் என்ன?.. எத்தனை வருடங்கள் ஆனாலும் திராவிட முன்னேற்ற கழகத்தால் ஆட்சிக்கு வர இயலாது. வரும் தேர்தலிலும் மக்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியை தான் மக்கள் தேர்வு செய்வார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister RB Udhayakumar told about DMK MK Stalin Speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->