ஒரே ஒரு வார்த்தையால் ரஜினியை உச்சி குளிர வைத்த அமைச்சர்! அப்படி என்ன கூறினார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பழம்பெரும் கதாசிரியரான கலை ஞானத்திற்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் கடம்பூர் ராஜு, இயக்குனர் பாரதிராஜா மேலும் பலர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் கதை ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாடகை வீட்டில் இருக்கும் கலை ஞானத்திற்கு புதிய வீடு வாங்கிக் கொடுக்கப் போவதாக ரஜினி தெரிவித்தார். 

மேலும், இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜு, ரஜினியை பாராட்டி பேசினார். கலை ஞானத்திற்கு, இயக்குனர் பாரதிராஜா பாராட்டு விழா நடத்துவது பாராட்டுக்குரியது. மற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்த நல்ல மனம் வேண்டும். 1976 ஆம் ஆண்டு எம்ஜிஆர் திரைத்துறையில் இருந்து முதலமைச்சர் ஆகிவிட்ட பிறகு ரஜினி படங்களை நிறைய வெளிவந்தனர்.

அவரது எல்லா படங்களையும் பார்த்து உள்ளேன். நானும் ரஜினி ரசிகன் தான். சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ரஜினி மட்டுமே தகுதியானவர். என்றைக்கும் அவர் தான் சூப்பர் ஸ்டார். மேலும், தமிழ் திரையுலகின் சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளனர். அதனை அம்மாவின் அரசு நிறைவேற்றிய தரும் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister kadambur raju say rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->