கடலில் நீந்த தெரிந்தவர்களுக்கு ஆழம் பற்றிய கவலையா?... அமைச்சர் ஜெயக்குமார் சூட்சம பேச்சு.!!
minister jeyakumar speech about rajini kamal politics entry
மார்ச் மாதம் 8 ஆம் தேதியான நேற்று உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தினத்தை தமிழகத்தில் சிறப்பிக்கும் பொருட்டு, தமிழக அரசின் சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஔவையார் சிலைக்கு மரியாதையை செய்யப்பட்டது.
இதன் அடிப்படியில் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஔவையாரின் உருவப்படத்திற்கு மரியாதையை செய்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,
நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம்.. வரட்டும்.. யார் வந்தாலும் அங்கீகாரம் என்பது மக்கள் தான் வழங்க வேண்டும். அவர் யாருடன் கூட்டணி வைக்கிறார், எந்த மாதிரியான கொள்கையை முன்வைக்கிறார் என்பதே முக்கியம்..
இவர் என்னதான் செய்தலும் அது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற வேண்டும். ரஜினிகாந்த், கமலஹாசன் என்று எதனை பேர் அரசியலுக்கு வந்தாலும், நான் ஒற்றை ஆளாக அனைவரையும் சமாளிப்போம். கடலில் நீந்த தெரிந்தவர்களுக்கு ஆழம் பற்றிய கவலை வேண்டுமா என்ன?.. அதிமுக எப்போதும் கரைசேர்ந்துவிடும்.. பிற நபர்கள் சேருவர்களா ? என்பதே பெரும் சந்தேகம் என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
minister jeyakumar speech about rajini kamal politics entry