ஒரே நேரத்தில் 3 படகுகளில் சவாரி செய்யும் மு.க.ஸ்டாலின்.! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்.!!
minister jayakumar says mk stalin
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். திமுகவில் இருந்து பிரிந்து 1972ல் எம்ஜிஆர் புதிதாக கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே, அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என கருணாநிதி பல்வேறு முயற்சிகள் செய்துவந்தார். ஆனால் அதெல்லாம் தோல்வியில் தான் முடிவடைந்தது.
தற்போது அவரது மகன் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்துவர். இவர் மட்டுமில்லை இவருடன் சேர்ந்து சிதம்பரமோ, தினகரனோ யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என்றார்.
கமல்ஹாசன், ராஜேந்திரபாலாஜி என யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேசவேண்டும் என்று கூறி, தீயினாற் சுட்டப்புண் உள்ளாரும் ஆறாதே நாவினாற் சுட்டவடு என்று திருக்குறளை எடுத்துக்காட்டாக கூறினார். திமுகவை பொறுத்தவரை அரசியல் கொள்கை என்பது கிடையாது. பணம், பதவி என்பது தான் திமுகவுக்கு ஒரே லட்சியம். ஒரே நேரத்தில் 3 படகில் பயணம் செய்யும் சாமர்த்தியம் திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே உண்டு என் கூறினார்.
English Summary
minister jayakumar says mk stalin