முதலமைச்சருக்கு, பாராட்டு விழா நடத்தப்போகும் ஸ்டாலின்? வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார். திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுக கட்ட ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, வெளிநாட்டு முதலீடுகள் இன்னும் நிறைய வர இருக்கிறது.

முதலமைச்சருக்கு, ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன் என்றும் கூறினார்.  ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து அறிக்கை அளிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினர்.

தம் மீது குற்றத்தை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை குற்றம்சாட்டுவதா? என ஸ்டாலினை சாடினார். வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு என்பதை திறந்த மனதோடு பாராட்ட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் தான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வந்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jayakumar press meet about mk stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->