பாஜக மட்டுமல்ல.. எந்த கட்சியாக இருந்தாலும் இதை செய்வோம்... அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!!
minister jayakumar press meet about kushboo arrest
பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திருமாவளவன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, சிதம்பரத்திற்கு நடிகை குஷ்பு காரில் புறப்பட்டு சென்றார். அவரையும் முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்தி, குஷ்பூவை காவல்துறையினர் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மட்டுமல்ல, சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தவிர்க்கவே குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
English Summary
minister jayakumar press meet about kushboo arrest