எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டதே? கவலையில் முக்கிய தலைவர்!
minister jayakumar press meet about dmk
இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, பகுத்தறிவுக் கொள்கையில் ஊறிய திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்தை விட்டு, 5 நட்சத்திர உணவத்தில் மீட்டிங் நடத்துகிறார்.
உள்ளாட்சித் தேர்தலை வரவேற்கிறோம் என சொல்லிவிட்டு, அதே சமயத்தில் நீதிமன்றத்திற்குக செல்வோம் என திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதன்மூலம் திமுக மக்களை ஏமாற்றுவது தெளிவாக தெரிகிறது.
எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டதே? அக்கட்சி இப்படி ஆகிவிட்டது பெரிய கவலையாக உள்ளது. அனைத்து குழப்பத்திற்கும் ஸ்டாலின் முதல்வர் கனவு தான் காரணம். யாரெல்லாம் முதல்வராக ஆக வேண்டும் என நினைக்கிறீர்களோ அவர்கள் நித்தியானந்தா போன்ற தனி தீவை வாங்கி அங்கு தன்னை முதல்வராக நியமித்துக் கொள்ளுங்கள் என்று காமெடியாக கூறினார்.
English Summary
minister jayakumar press meet about dmk