ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பரிசு!!
minister jayakumar present gold ring to born babies
இன்று (திங்கட்கிழமை) மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான இன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்றைய தினத்தில் ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மாநில அமைச்சர் டி.ஜெயக்குமார் பரிசளித்தார்.
இதற்கிடையே, சென்னை மாவட்டம் சார்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி விருகம்பாக்கம், காமராஜர் சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று நடக்கிறது. பகல் 11 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வி.சரோஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
English Summary
minister jayakumar present gold ring to born babies