முக.ஸ்டாலினை முச்சந்தியில் வைத்து, கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.!!
minister CV shanmugam angry speech about Mk stalin
தமிழகத்தின் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான முத்தமிழ் செல்வனை., அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அறிமுகம் செய்யும் கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம்., திமுக மீது கடுமையான விமர்சனத்தை வைத்து., அறிமுக கூட்டத்திலேயே அனல்பறக்க விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது., திமுக தலைவரான உருட்டலுக்கும்., மிரட்டலுக்கும் எந்த சமயத்திலும் அஞ்சும் நபர் நான் இல்லை. முக.ஸ்டாலின் என்ன உத்தமரா?., முக ஸ்டாலின் இனி கனவில் கூட முதலமைச்சர் ஆக மாட்டார் என்றும்., கருணாநிதியை போன்று இன்னும் 100 கருணாநிதி பிறந்தாலும்,, திமுக செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்வது இயலாத காரியமாகும்.
திமுக தலைவரான ஸ்டாலினின் அவரது உருட்டலையும்., மிரட்டலையும் வேறு எங்காவது காட்டிக்கொள்ள வேண்டும். இதனை அதிமுகவினரிடம் காட்ட கூடாது எனவும்., விக்கிரவாண்டியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தை நாங்கள் கொண்டு வந்தால்., திமுகவிற்கு என்னவாம்?.. திமுக கட்சியில் மட்டும் தான் வழக்கறிஞர்கள் உள்ளனரா? எங்களிடம் இல்லையா?... முக.ஸ்டாலின் பத்து அடி பாய்ந்தால்., நான் 100 அடி பாய்வேன்...
உங்களுக்கு மட்டும் தான் வழக்கிடுதல் தெரியுமா என்ன? எங்களுக்கும் எல்லாம் தெரியும் என்று கூட்டத்தில் தெறிக்கவிட்டுவிட்டார். இதுமட்டுமல்லாது திமுகவினரின் முதுகில் 1000 அழுகுக்குகளை மூட்டையாக கட்டி சுமந்து கொண்டு இருக்கும் சமயத்தில்., எங்களின் மீது குறைகள் சொல்ல எப்படிதான் இயலுமோ? என்றும்., நான் நோண்ட ஆரம்பித்தால் தாங்க மாட்டிர்கள் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
minister CV shanmugam angry speech about Mk stalin