திருமா குறித்து அவதூறு பேசியவர் கைது.! அடுத்தடுத்து நடந்த தொடர் சம்பவங்கள்.!
men arrest in oothangarai
கிருஷ்ணகிரி அருகே ஊத்தங்கரை அருகே சாசனூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (30) என்பவர் ஊத்தங்கரையில் இருக்கும் தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பிறந்த நாள் பதிவுகளை இட்டு அதில் அவரின் சமூகத்தின் பெயரினை போட்டு பல்வேறு விதமாக வாழ்த்து கூறி வந்தனர்.
அந்த சமயத்தில் திருமாவளவன் மீது வெறுப்பு கொண்டுள்ள சிலர் அவரை இழவும் செய்தனர். அதுபோல தான் சாமிநாதனும் திருமாவளவனை திட்டி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
ஊத்தங்கரை விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் சரவணன் இதுகுறித்து, "விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி.யை பற்றி சாமிநாதன் என்பவர் ஆபாசமாக திட்டி வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பதிவிட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதன் பேரில் சாமிநாதனை கைது செய்து போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அதன் பின்னர் ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
English Summary
men arrest in oothangarai