தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது - மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ.!
MDMK Vaiko speech about tamilnadu govt under MK Stalin
தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று வைகோ கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். சொல்லாததையும் செய்து வருகிறேன் என அவர் சொல்லி வருவதைப் போல சொல்லாததையும் செய்து காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் சாதித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பின்னர் சிறந்த ஆட்சி நடைபெற முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது.
இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. இந்தியையும், இந்துத்துவா கொள்கையும் நிலைநாட்டும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார். தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்ட திராவிட இயக்க கோட்டையை சிதைத்து விடலாம் என்ற மோடி கூட்டத்தின் பகல் கனவு ஒரு காலம் நிறைவேறாது என அவர் கூறியுள்ளார்.
English Summary
MDMK Vaiko speech about tamilnadu govt under MK Stalin