தமிழகம் : ஒரு வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைப்பு.! சற்றுமுன் மாநில தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.!
mayiladuthurai 19 ward election cancel
மயிலாடுதுறை நகராட்சியின் 19வது வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டில் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அன்னதாட்சி மரணமடைந்ததை அடுத்து, தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர் உயிரிழந்ததால், மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டின் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mayiladuthurai 19 ward election cancel