#விழுப்புரம் || 16 வயது சிறுமியை கடத்தி சென்ற திமுக கவுன்சிலர்.! பாலியல் வன்கொடுமை., கொலை மிரட்டல்.! கதறி அழும் தந்தை.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே 16 வயது தனது மகளை  திமுக கவுன்சிலர் கடத்தி வைத்துக்கொண்டு, பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (சிறுமி என்பதால் தந்தையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் மனைவி இவரை விட்டுப் பிரிந்து விட்டார்.

இதனால் இவர் தற்போது, மரகதபுரம் கிராம திமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான சிவகுமார் என்பவருடன், தனது 16 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், சிவக்குமாரின் ஆட்கள் வீட்டில் இருந்த தங்க நகைகள், 5 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்றதாக ரமேஷ் மீது பொய் புகார் அளித்துள்ளனர்.

மேலும், 16 வயது மகளை கடத்தி வைத்து கொண்டு, திமுக கவுன்சிலர் சிவக்குமார் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, ரமேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது மகளை திமுக கவுன்சிலர் இடம் இருந்து மீட்டு தரவேண்டும் என்றும் ரமேஷ் மனு அளித்துள்ளார். 

இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை ரமேஷ் தெரிவிக்கையில், "திமுக கவுன்சிலர் சிவகுமாரும் அவருடன் சேர்ந்த நபர் ஒருவரும் எனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். அவர்கள் இடம் இருந்து எனது மகளை மீட்டு கொடுக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ரமேஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marakathapuram dmk counselor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->